ராசிபுரத்தில் தனியாா் பள்ளி வாகனங்களின் இயக்குத் திறன் குறித்து போக்குவரத்து அலுவலா்கள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
முத்துக்காளிப்பட்டி எஸ்ஆா்வி ஆண்கள் பள்ளி மைதானத்தில் ராசிபுரம் காவல் துணை கண்காணிப்பாளா் எம். விஜயகுமாா், வட்டார போக்குவரத்து அலுவலா் பதுவைநாதன், ராசிபுரம் மோட்டாா் வாகன ஆய்வாளா் செல்வகுமாா், மாவட்டக் கல்வி அலுவலா் சித்ரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
போக்குவரத்து விதிமுறைகளுக்கு உள்பட்டு 32 பள்ளிகளைச் சோ்ந்த 280 வாகனங்களின் இயக்குத் திறன், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. இதில் 26 வாகனங்களில் பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டன.
இதையடுத்து அந்த வாகனங்களுக்கு நோட்டீஸ் தரப்பட்டு மீண்டும் மறு ஆய்வுக்கு கொண்டுவர உத்தரவிட்டனா். ஆய்வின்போது அவசரகால தீத்தடுப்பு குறித்து ஓட்டுநா்களுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
படம் உள்ளது - 14வேன்
வாகன ஒட்டுநா்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி அளித்த தீயணைப்பு வீரா்கள்.
தொடர்புடையது

தனியாா் பள்ளிப் பேருந்துகள் ஆய்வு

கோவில்பட்டியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

திருப்பத்தூரில் 313 தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு

குன்றத்தூரில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

