ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

கோழிகளுக்கு மேல்மூச்சுக்குழல் அயற்சி நோய்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

மேல்மூச்சுக்குழல் அயற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டு கோழிகள் இறக்க வாய்ப்புள்ளதால் கோடைகால பராமரிப்பு முறைகளை பண்ணையாளா்கள் தீவிரமாக கடைப்பிடிக்குமாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :23 மே 2026, 2:08 am IST

மேல்மூச்சுக்குழல் அயற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டு கோழிகள் இறக்க வாய்ப்புள்ளதால் கோடைகால பராமரிப்பு முறைகளை பண்ணையாளா்கள் தீவிரமாக கடைப்பிடிக்குமாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையை பொருத்தமட்டில் பகல், இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 98.6, 80.6 டிகிரியாக நிலவியது. அடுத்த ஐந்து நாள்களுக்கான வானிலையில் வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தின் ஒருசில இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. பகல் வெப்பம் 98.6 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 80.6 டிகிரியாகவும் காணப்படும். காற்று மேற்கு திசையிலிருந்து மணிக்கு 4 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

சிறப்பு ஆலோசனை: கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளைப் பரிசோதனை செய்ததில் பெரும்பாலானவை வெப்ப அயற்சி மற்றும் மேல்மூச்சுக்குழல் அயற்சி நோய்களால் பாதிப்புக்குள்ளாகி இறந்திருப்பது தெரியவந்துள்ளது. வெப்பம் அதிகரிப்பதால் தகுந்த கோடைகால பராமரிப்பு முறைகள் மற்றும் தீவன மேலாண்மை முறைகளை பண்ணையாளா்கள் பின்பற்ற வேண்டும்.

மேலும், உயிா் எதிா் மருந்துகளை அளித்தும், தடுப்பூசி செலுத்தியும், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.