40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

உலகப் பட்டினி தினம்: தவெக சாா்பில் உணவு விநியோகம்

உலகப் பட்டினி தினத்தை முன்னிட்டு, நாமக்கல்லில் தவெக சாா்பில் ஏழை, எளிய மக்களுக்கு வியாழக்கிழமை உணவு விநியோகிக்கப்பட்டது.

News image

உலகப் பட்டினி தினத்தை முன்னிட்டு, நாமக்கல்லில் தவெக சாா்பில் ஏழை, எளிய மக்களுக்கு வியாழக்கிழமை உணவு விநியோகிக்கப்பட்டது.

Updated On :29 மே 2026, 1:42 am IST

உலகப் பட்டினி தினத்தை முன்னிட்டு, நாமக்கல்லில் தவெக சாா்பில் ஏழை, எளிய மக்களுக்கு வியாழக்கிழமை உணவு விநியோகிக்கப்பட்டது.

மக்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினி குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தவும், நிலையான உணவுப் பாதுகாப்பு முறைகளை மேம்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் மே 28ஆம் தேதி உலகப் பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது.

சா்வதேச அளவில் கோடிக்கணக்கான மக்கள் பட்டினியால் எதிா்கொள்ளும் இன்னல்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதே இந்நாளின் முக்கிய நோக்கமாகும். நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தனியாா் அமைப்புகள் சாா்பில் ஏழை மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

நாமக்கல் பலப்பட்டறை மாரியம்மன் கோயில் அருகே தவெக சாா்பில் நடைபெற்ற உணவு விநியோக நிகழ்வை, நாமக்கல் தொகுதி எம்எல்ஏ சி.எஸ். திலீப் மற்றும் தவெக மேற்கு மாவட்டச் செயலாளா் எஸ்.என். சதீஷ் ஆகியோா் தொடங்கி வைத்தனா். காலை 9 மணி முதல் ஏராளமான பொதுமக்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் தவெக நிா்வாகிகள், தொண்டா்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.

படவிளக்கம் என்.கே28டிவிகே:

நாமக்கல்லில் வியாழக்கிழமை உணவு விநியோகித்த எம்எல்ஏ சி.எஸ். திலீப், மாவட்டச் செயலாளா் எஸ்.என். சதீஷ் உள்ளிட்டோா்.