சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆவணப்பதிவு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

தவெக வேட்பாளரை விலைக்கு வாங்கிதான் எடப்பாடி கே. பழனிசாமி வெற்றிபெற்றாா்

News image

எடப்பாடி கே. பழனிசாமி - கோப்புப்படம்.

Updated On :31 மே 2026, 1:50 am IST

தோ்தலின்போது எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரை விலைக்கு வாங்கிதான் பழனிசாமி வெற்றிபெற்றாா் என தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் அருண்ராஜ் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்துள்ள கூனாவேலம்பட்டிபுதூா் பகுதியில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு அழியா இலங்கை அம்மன் கோயிலில் அமைச்சா் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்து அன்னதானம் செய்தாா். தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

மருத்துவத் துறையில் மட்டுமல்லாமல் பல துறைகளில் திமுக ஆதரவாளா்கள் நிறைய போ் உள்ளனா். அவா்கள் ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதால், இதற்கான முடிவு விரைவில் எடுக்கப்படும்.

ராசிபுரத்தில் நடைபெற்று வரும் மாவட்ட மருத்துவமனை கட்டுமானப் பணி முடிவடைய மேலும் ரூ. 10 கோடி தேவைப்படுகிறது. இதுகுறித்து முதல்வரிடம் பேசி பணிகள் முடித்து மருத்துவமனை திறக்கப்படும்.

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு டிஜிபி இல்லாமலே ஆட்சி நடந்து வந்தது. தற்போது புதிய டிஜிபி நியமிக்கப்பட்டுள்ளதால், தமிழக சட்டம் - ஒழுங்கு முழுமையாக பாதுகாக்கப்படும்.

எடப்பாடி தொகுதியில் குதிரை பேரம் மூலம் தவெக வேட்பாளரை பழனிசாமி விலைக்கு வாங்கி உள்ளாா். அதன்மூலமே அந்த தொகுதியிலேயே பழனிசாமி வெற்றிபெற்றாா். எனவே, தவெக கட்சிக்கு பலா் வருவதை பற்றி பேச அவருக்கு தகுதி கிடையாது என்றாா்.