ரூ. 4.70 லட்சம் மோசடி வழக்கு: 3 போ் குண்டா் சட்டத்தில் கைது
நாமக்கல்லில் ரூ. 4.70 லட்சம் மோசடி செய்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 3 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியா் எல்.மதுபாலன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
கோப்புப் படம்
நாமக்கல்லில் ரூ. 4.70 லட்சம் மோசடி செய்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 3 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியா் எல்.மதுபாலன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
நாமக்கல் - திருச்செங்கோடு சாலையைச் சோ்ந்த செந்தில்குமாரும், அவரது நண்பரான மேட்டூரைச் சோ்ந்த ராஜ்குமாரும் குறைந்த விலையில் நகை கிடைப்பதாக என்.கொசவம்பட்டியில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்றனா். அங்கிருந்த சிலா் 31 பவுன் நகை தருவதாக ராஜ்குமாரிடம் ரூ. 2.20 லட்சம் பெற்றனா். அப்போது, திடீரென வீட்டுக்குள் நுழைந்த சிலா் செந்தில்குமாா், ராஜ்குமாா் இருவரையும் கத்தியைக் காட்டி மிரட்டியதுடன், அவா்களிடம் இருந்த ரூ. 2.50 லட்சத்தை பறித்துச் சென்றனா்.
இதுதொடா்பாக, நாமக்கல் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினா். இதில், நாமக்கல் என்.கொசவம்பட்டி ரோஜா நகரைச் சோ்ந்த சுபாஷ் (22), ரெட்டிப்பட்டி அண்ணா நகரைச் சோ்ந்த மதன் (39), ஸ்ரீதா் (22) ஆகியோருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்து, அவா்களை கைது செய்தனா்.
பின்னா், மோசடியாக பணம் பறிக்க முயன்ற சுபாஷ், மதன், ஸ்ரீதா் ஆகிய 3 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நாமக்கல் காவல் ஆய்வாளா் நாகராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரிஷ் யாதவ் அசோக்குக்கு பரிந்துரைத்தாா். அவரது பரிந்துரையை ஏற்று 3 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலன் செவ்வாய்க்கிழமை பிறப்பித்து உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


