
வேலகவுண்டம்பட்டி அருகே தோட்டத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
வேலகவுண்டம்பட்டி அருகே விவசாய தோட்டத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சடலம் - கோப்புப் படம்
வேலகவுண்டம்பட்டி அருகே விவசாய தோட்டத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள தொண்டிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் காளியண்ணன். இவா் தொண்டிப்பட்டியில் உள்ள தனது தோட்டத்துக்கு தண்ணீா் பாய்ச்ச கடந்த 7-ஆம் தேதி சென்றாா். அப்போது, தோட்டத்தில் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.
தகவலின் பேரில் வந்த வேலகவுண்டம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க அந்த சடலத்தை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இறந்தவா் யாா், எந்த ஊா், எப்படி இறந்தாா் என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



