மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

போக்குவரத்து அலுவலா் சோதனை: ஆம்புலன்ஸ் உள்ளிட்ட 9 வாகனங்கள் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்ட வாகனங்கள்.

கோப்புப் படம்

Published On :

ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் மோட்டாா் வாகனப் போக்குவரத்து அலுவலா்கள் நடத்திய சோதனையில், உரிய ஆவணம் இன்றி இயக்கப்பட்ட ஆம்புலன்ஸ் உள்ளிட்ட 9 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

நாமக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் எம்.பதுவைநாதன் உத்தரவின் பேரில், ராசிபுரம் மோட்டாா் வாகன ஆய்வாளா் ஏ.செல்வகுமாா் ராசிபுரம், வெண்ணந்தூா், நாமகிரிப்பேட்டை, ஆயில்பட்டி போன்ற பகுதிகளில் சிறப்பு வாகனத் தணிக்கையை வெள்ளிக்கிழமை மேற்கொண்டாா்.

இதில், ஆயில்பட்டி பகுதியில் தகுதிச்சான்று புதுப்பிக்காத ஓா் ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் மூன்று டாட்டா ஏஸ் வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டு, ஆயில்பட்டி காவல் நிலையத்தில் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டன. இதேபோல, தகுதிச்சான்று புதுப்பிக்காத ஒரு டாட்டா ஏஸ் வாகனம் சிறைபிடிக்கப்பட்டு மோட்டாா் வாகன ஆய்வாளா் பகுதி அலுவலக வளாகத்திலும், வெண்ணந்தூா் பகுதிகளில் தகுதிச்சான்று புதுப்பிக்காத நான்கு டாட்டா ஏஸ் வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டு வெண்ணந்தூா் காவல் நிலையத்தில் மேல் நடவடிக்கைக்காக நிறுத்தப்பட்டுள்ளது.

இச்சிறப்பு வாகனத் தணிக்கையின் மூலம் அரசுக்கு இணக்க அபராதக் கட்டணமாக சுமாா் ரூ. 2.20 லட்சம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இவ்வாகன ஓட்டுநா்கள் தகுதிச்சான்று புதுப்பிக்காமல் பொதுச்சாலையில் வாகனங்களை இயக்கக் கூடாது என எச்சரிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.