40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

சேலத்தில் இந்திய கம்யூ. ரயில் மறியல் போராட்டம்: 119 பேர் கைது

சேலத்தில் ரயில் மறியல் செய்ய முயன்றதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 119 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :5 ஏப்ரல் 2018, 7:09 am IST

சேலத்தில் ரயில் மறியல் செய்ய முயன்றதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 119 பேரை போலீஸார் கைது செய்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
இந்தநிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி சேலம் ரயில் நிலையத்தில் புதன்கிழமை காலை பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.
இதனிடையே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டச் செயலாளர் மோகன் தலைமையில், நிர்வாகிகள் ஜீவானந்தம்,  ராமன், பரமசிவம் உள்ளிட்டோர் தபால் நிலையம் முன் திரண்டனர். பின்னர் ஊர்வலமாகத் திரண்டு ரயில் நிலையம் நோக்கிச் சென்றனர். அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் அவர்களை நுழைவுவாயிலிலேயே தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து நுழைவுவாயில் முன் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், மத்திய அரசுக்கு எதிராகவும் முழக்கமிட்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 119 பேரை போலீஸார் கைது செய்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
திமுகவினர் ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே மத்திய மாவட்டச் செயலாளர் எம்எல்ஏ வழக்குரைஞர் ஆர்.ராஜேந்திரன் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது.
இதில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட், இந்திய முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.
அதேபோல அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு  சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வீரபாண்டி ஆ.ராஜா தலைமை வகித்தார். இதில் முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி,  முன்னாள் எம்எல்ஏ தமிழ்ச்செல்வன், நிர்வாகிகள் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.