அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்கண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலாஉளவுத்துறை ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க் நியமனம்!தூய அரசியல் என்று சொல்லிவிட்டு அழுக்கு அரசியல் செய்கிறார் விஜய்! மு.க. ஸ்டாலின்
/

தாரமங்கலம் கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேக விழா: முன்னேற்பாட்டுப் பணிகள் ஆய்வு 

தாரமங்கலம் அருள்மிகு சிவகாம சுந்தரி உடனுறை கைலாசநாதர் திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதை முன்னிட்டு, முன்னேற்பாட்டுப் பணிகளை

Updated On :18 ஏப்ரல் 2018, 9:44 am IST

தாரமங்கலம் அருள்மிகு சிவகாம சுந்தரி உடனுறை கைலாசநாதர் திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதை முன்னிட்டு, முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
 சங்ககிரி உறுப்பினர் எஸ்.ராஜா முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் மகா கும்பாபிஷேக விழா முன்னேற்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் கூறியது: ஓமலூர் வட்டம், தாரமங்கலத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க அருள்மிகு சிவகாமசுந்தரி உடனுறை கைலாசநாதர் திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வரும் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
 மகாகும்பாபிஷேக விழா 18-ஆம் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் 11 மணிக்குள் மங்கள இசை, விநாயகர் பூஜை, சர்வ தேவதா அனுக்ஞை எஜமானர் சங்கல்பம், வாஞ்சாகல்ப கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை பிரசாதம் வழங்குதலும், 19, 20, 21 ஆகிய தினங்களில் சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளன. அதனைத் தொடர்ந்து, 22-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 9.30 மணிக்குள் அருள்மிகு சிவகாமசுந்தரி உடனுறை கைலாசநாதர் திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
 இவ்விழா முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்தும், தரைதளம், கோபுர வேலைப்பாடுகள், கோயில் சுற்றுச்சுவர் பணிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
 விழாவில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும். குடிநீர், மருத்துவ வசதி, வாகனங்களை நிறுத்துவதற்கான தேவையான இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.
 ஆய்வின் போது, சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் ராமதுரைமுருகன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கோவிந்தன், கண்ணன், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் உமாதேவி, தாரமங்கலம் கைலாசநாதர் திருக்கோயில் செயல்அலுவலர் கலைச்செல்வி ஆகியோர் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.