இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

தாரமங்கலம் கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேக விழா: முன்னேற்பாட்டுப் பணிகள் ஆய்வு 

தாரமங்கலம் அருள்மிகு சிவகாம சுந்தரி உடனுறை கைலாசநாதர் திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதை முன்னிட்டு, முன்னேற்பாட்டுப் பணிகளை

Updated On :18 ஏப்ரல் 2018, 9:44 am IST

தாரமங்கலம் அருள்மிகு சிவகாம சுந்தரி உடனுறை கைலாசநாதர் திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதை முன்னிட்டு, முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
 சங்ககிரி உறுப்பினர் எஸ்.ராஜா முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் மகா கும்பாபிஷேக விழா முன்னேற்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் கூறியது: ஓமலூர் வட்டம், தாரமங்கலத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க அருள்மிகு சிவகாமசுந்தரி உடனுறை கைலாசநாதர் திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வரும் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
 மகாகும்பாபிஷேக விழா 18-ஆம் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் 11 மணிக்குள் மங்கள இசை, விநாயகர் பூஜை, சர்வ தேவதா அனுக்ஞை எஜமானர் சங்கல்பம், வாஞ்சாகல்ப கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை பிரசாதம் வழங்குதலும், 19, 20, 21 ஆகிய தினங்களில் சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளன. அதனைத் தொடர்ந்து, 22-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 9.30 மணிக்குள் அருள்மிகு சிவகாமசுந்தரி உடனுறை கைலாசநாதர் திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
 இவ்விழா முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்தும், தரைதளம், கோபுர வேலைப்பாடுகள், கோயில் சுற்றுச்சுவர் பணிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
 விழாவில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும். குடிநீர், மருத்துவ வசதி, வாகனங்களை நிறுத்துவதற்கான தேவையான இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.
 ஆய்வின் போது, சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் ராமதுரைமுருகன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கோவிந்தன், கண்ணன், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் உமாதேவி, தாரமங்கலம் கைலாசநாதர் திருக்கோயில் செயல்அலுவலர் கலைச்செல்வி ஆகியோர் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.