தலைவாசல் வட்டாரத்தில் விவசாயிகள் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் இரா.ரவிச்சந்திரன் புதன்கிழமை அழைப்பு விடுத்துள்ளார்.
தலைவாசல் வட்டார விவசாயிகள் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர தலைவாசல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் இரா.ரவிச்சந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். காரீப் பருவத்தில் சாகுபடி செய்யும் மக்காச்சோளத்திற்கு ஒரு ஏக்கருக்கு பிரீமியம் ரூ.464, பருத்தி பயிருக்கு ரூ.607 செலுத்த ஆகஸ்ட் மாதம் 16-ஆம் தேதி கடைசி நாளாகும்.
எனவே விவசாயிகள் அனைவரும் கணினி சிட்டா, பட்டா அடங்கல், ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்குகளோடு தலைவாசல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுக வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







