மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட அதிக அளவிலான உபரி நீரால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பூலாம்பட்டி பகுதியில் விவசாயப் பயிர்கள் சேதமடைந்தன.
காவிரி ஆற்றில் கடந்த 13 ஆண்டுகளாக போதிய நீர்வரத்து இல்லாத நிலையில், காவிரி கரையோரப் பகுதிகளான பூலாம்பட்டி, நாவிதன்குட்டை, கோட்டைமேடு, கோனேரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி வாழை, கரும்பு, சோளம் உள்ளிட்ட பயிர் வகைகளை பயிர் செய்து வந்தனர். இந்த நிலையில் அண்மையில் காவிரி ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கினால், கரையோரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் விவசாய நிலங்களில் வெள்ளநீர் புகுந்தது. இதனால் கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தன.
இந்த நிலையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சனிக்கிழமை மாலை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராமதாஸ் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக விவசாயிகளிடம் கூறினார். கடந்த சில ஆண்டுகளாக பாசனத்துக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் கஷ்டப்பட்டுவந்த தாங்கள், தற்போது வெள்ளப்பெருக்கினால் பாதிப்பிற்குள்ளாகியுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் வேதனையுடன் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூலை 26 - நேரலை

மாப்ள சீமான்... இதேபோன்ற மேடை 2 மாதங்களுக்கு முன்பு அமைந்திருந்தால்...: நயினார் நாகேந்திரன் பேச்சு!

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

கார்கில் போர் நினைவிடத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


