தமிழ்நாடு பொது சார்நிலை பணி முத்திரைக் கொல்லர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, திறனறித் தேர்வு நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தொழிலாளர் துறை கூடுதல் ஆணையர் அலுவலகத்தில் (கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி) காலியாக உள்ள முத்திரைக் கொல்லர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக ஏப். 2 மற்றும் ஆக. 27-ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதைத் தொடர்ந்து, டிச. 2-ஆம் தேதி தேர்வு நடைபெற்று முடிவுகள் வெளியிடப்பட்டன.
இந்நிலையில், வரும் டிச. 28-ஆம் தேதி நடைபெற இருந்த சான்றிதழ் சரிபார்ப்பு, திறனறித் தேர்வு ஆகிய அனைத்தும் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தொழிலாளர் துறை கூடுதல் ஆணையர் ஆர்.செந்தில்குமாரி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






