சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ஆத்தூரில் புதிய வழித்தடப் பேருந்து தொடக்கம்

ஆத்தூர் பேருந்து நிலையத்தில் புதிய வழித்தடத்தில் நகரப் பேருந்தை மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவர் ஆர். இளங்கோவன் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார்.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 4:00 am

DIN

ஆத்தூர் பேருந்து நிலையத்தில் புதிய வழித்தடத்தில் நகரப் பேருந்தை மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவர் ஆர். இளங்கோவன் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார்.
ஆத்தூரிலிருந்து நரசிங்கபுரம், செல்லியம்பாளையம்,  ராமநாயக்கன்பாளையம் வழியாக அய்யங்கரடு வரை இயக்கப்படும் புதிய வழித்தட நகரப் பேருந்து தொடக்க விழா ஆத்தூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. காலை 8 மணிக்கும், மாலை 5 மணிக்கும் பள்ளி மாணவர்கள்  சென்றுவர வசதியாக இயக்கப்படவுள்ள இந்தப் பேருந்தை நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவர் ஆர். இளங்கோவன் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.
ஆத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஆர். எம். சின்னதம்பி, நகரச் செயலாளர் அ.மோகன், ஆத்தூர் வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவர் இரா. தென்னரசு, நரசிங்கபுரம் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் எம். பாலமுருகன், அவைத் தலைவர் பி.கலியன், ராஜமாணிக்கம், காளிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.