சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

சங்ககிரி ரோட்டரி சங்கம் சார்பில் இலவச தையல், கணினி பயிற்சி

சங்ககிரி ரோட்டரி சங்கம் சார்பில் 9-ஆவது ஆண்டாக  இலவச தையல், கணினி பயிற்சிகள் தொடக்க விழா ரோட்டரி சங்க வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. 

Updated On :23 ஜூலை 2018, 9:35 am IST

சங்ககிரி ரோட்டரி சங்கம் சார்பில் 9-ஆவது ஆண்டாக  இலவச தையல், கணினி பயிற்சிகள் தொடக்க விழா ரோட்டரி சங்க வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. 
ரோட்டரி சங்கத் தலைவர் எஸ்.செந்தில்குமார் தலைமை வகித்தார்.  துணை ஆளுநர் கே.ரமேஷ்பாபு, இலவச தையல், கணினி பயிற்சி வகுப்புகளை தொடக்கி வைத்துப் பேசினார்.
செயலர் ஜெ.நந்தகுமார்,  பொருளாளர் எஸ்.துரைசாமி, திட்டகுழுத் தலைவர் என்.ராஜம்மா,  முன்னாள் தலைவர்கள் எ.வெங்கடேஸ்வரகுப்தா, சி.வெங்கடாசலம் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
சங்ககிரி ரோட்டரி சங்கம் சார்பில் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்கும் முயற்சியாக முதல்முறையாக சங்ககிரி மலை அடிவாரத்தில் இருந்து மையப் பகுதியில் உள்ள சுரங்கப்பாதை வரை உள்ள நெகிழிப் பைகள் மற்றும் நெகிழிப் புட்டிகளை சனிக்கிழமை அகற்றினர். நிகழ்ச்சியில் தலைவர் எஸ்.செந்தில்குமார், செயலர் ஜெ.நந்தகுமார், துணைத்தலைவர் எஸ்.தியாகராஜன், முன்னாள் தலைவர்கள் எ.வெங்கடஸ்வரகுப்தா, கே.ராமசாமி மற்றும் உறுப்பினர் திவாகர் ஆகியோர் இப்பணிகளை மேற்கொண்டனர். தொடர்ந்து இப்பணிகளை மேற்கொள்ளப் போவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.