சங்ககிரி ரோட்டரி சங்கம் சார்பில் 9-ஆவது ஆண்டாக இலவச தையல், கணினி பயிற்சிகள் தொடக்க விழா ரோட்டரி சங்க வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
ரோட்டரி சங்கத் தலைவர் எஸ்.செந்தில்குமார் தலைமை வகித்தார். துணை ஆளுநர் கே.ரமேஷ்பாபு, இலவச தையல், கணினி பயிற்சி வகுப்புகளை தொடக்கி வைத்துப் பேசினார்.
செயலர் ஜெ.நந்தகுமார், பொருளாளர் எஸ்.துரைசாமி, திட்டகுழுத் தலைவர் என்.ராஜம்மா, முன்னாள் தலைவர்கள் எ.வெங்கடேஸ்வரகுப்தா, சி.வெங்கடாசலம் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சங்ககிரி ரோட்டரி சங்கம் சார்பில் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்கும் முயற்சியாக முதல்முறையாக சங்ககிரி மலை அடிவாரத்தில் இருந்து மையப் பகுதியில் உள்ள சுரங்கப்பாதை வரை உள்ள நெகிழிப் பைகள் மற்றும் நெகிழிப் புட்டிகளை சனிக்கிழமை அகற்றினர். நிகழ்ச்சியில் தலைவர் எஸ்.செந்தில்குமார், செயலர் ஜெ.நந்தகுமார், துணைத்தலைவர் எஸ்.தியாகராஜன், முன்னாள் தலைவர்கள் எ.வெங்கடஸ்வரகுப்தா, கே.ராமசாமி மற்றும் உறுப்பினர் திவாகர் ஆகியோர் இப்பணிகளை மேற்கொண்டனர். தொடர்ந்து இப்பணிகளை மேற்கொள்ளப் போவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பள்ளிகளில் இதுவரை 3.37 லட்சம் மாணவா்கள் சோ்க்கை: காலக்கெடு நிா்ணயிக்க ஆசிரியா்கள் வலியுறுத்தல்

நாட்டில் டிராக்டா் விற்பனை விறுவிறுப்பு

கடந்த 2025-26 நிதியாண்டில் அரசு கஜானாவுக்கு வேதாந்தா ரூ.62,722 கோடி பங்களிப்பு!





