காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

மகிளா காங்கிரஸார் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆத்தூரில் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வைக் கண்டித்து சேலம் கிழக்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :30 ஜனவரி 2024, 6:44 pm IST

ஆத்தூரில் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வைக் கண்டித்து சேலம் கிழக்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 ஆத்தூர் கடைவீதி அஞ்சல் நிலையம் முன் சேலம் கிழக்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் பொறுப்பாளர் மகாலட்சுமி தலைமையில் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருள்களின் விலை ஏற்றத்தால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதனைக் கண்டித்து மத்திய, மாநில அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் எஸ்.கே.அர்த்தனாரி முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நரசிங்கபுரம் முன்னாள் நகர்மன்றத் தலைவர் எஸ்.சக்ரவர்த்தி, மாவட்ட பொதுச்செயலர் ஜி.பாஸ்கர், நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் எல்.முருகேசன், மாவட்டச் செயலர் வி.குமார், நரசிங்கபுரம் நகரத் தலைவர் ஜோதிபாசு, முன்னாள் மாவட்ட தலைவர் தர்மலிங்கம் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.