மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சேலம்-சென்னை பசுமை வழி சாலை திட்டத்தைக் கைவிட கோரி மனு

சேலம் -சென்னை பசுமை வழி சாலை திட்டத்தைக் கைவிட கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

Updated On :14 மே 2018, 9:09 pm

சேலம் -சென்னை பசுமை வழி சாலை திட்டத்தைக் கைவிட கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் குப்பனூர், சின்ன கவுண்டாபுரம், ராமலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை காலை வந்தனர். பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமாரிடம், பொதுமக்கள் மனு அளித்தனர்.
அதில், பசுமை வழி சாலை திட்டத்துக்காக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள மலைகள், விவசாய நிலங்கள், பல்வேறு கட்டுமானங்கள் அழிக்கப்பட உள்ளன.
இதனால் சிறு, குறு விவசாயிகள் ஏராளமானோர் பாதிக்கப்பட உள்ளனர். எனவே பசுமை வழி சாலை திட்டத்துக்கு நிலத்தை வழங்க முடியாது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் பசுமை வழி சாலை திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.