ஓமலூர் அருகே மின்னல் பாய்ந்ததில் ஆறு ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.
ஓமலூர் அருகே உள்ள சிக்கம்பட்டி ஊராட்சியில் பெரியகாடம்பட்டிகிராமம் உள்ளது. இந்தப் பகுதியில் வசிக்கும் விவசாயி ராமராஜ்-சின்னபொண்ணு தம்பதியினர் தங்களது தோட்டத்தில் எட்டு செம்மறி ஆடுகள் வளர்த்து வருகின்றனர். இவர்கள் ஆடுகளை பகல் நேரத்தில் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று வந்து மாலையில் வீட்டில் கட்டி வைத்து வளர்த்து வருகின்றனர். இந்தநிலையில், கடந்த ஒரு வாரமாகவே ஓமலூர் வட்டாரக் கிராமங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதேபோன்று புதன்கிழமை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மேலும், இடி மின்னலுடன் மழை பெய்யத் துவங்கியது. இதையடுத்து, சின்னப்பொண்ணு ஆறு ஆடுகளை அவரது வீட்டின் அருகில் உள்ள கொட்டகையில் கட்டியிருந்தார். இரண்டு ஆடுகளை வீட்டின் வராண்டாவில் கட்டியிருந்தார். அப்போது பலத்த மழையுடன்,பலத்த இடி மின்னல் அடித்தது.
இந்தநிலையில், விவசாயி ராமராஜ் வீட்டின் அருகில், யாரும் எதிர்பாராத வகையில் திடீரென பலத்த இடி சத்தத்துடன் பலமான மின்னல் தாக்கியது. இதில் வீட்டின் அருகில் கட்டியிருந்த இருந்த ஆறு ஆடுகளை மின்னல் பலமாகத் தாக்கியது.இதில் ஆடுகள் அதே இடத்தில் விழுந்து பரிதாபமாக இறந்தன. இதேபோன்று அருகில் இருந்த மரங்கள், வீடுகள் சேதமடைந்தன.
இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு கிராம நிர்வாக அலுவலகர் கீர்த்திவாசன், மின்னலால் இறந்த ஆடுகள், கருகிய மரங்கள்,சேதமடைந்த பொருள்கள் குறித்து விசாரணை நடத்தி சேத மதிப்பைக் கணக்கிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூலை 26 - நேரலை

மாப்ள சீமான்... இதேபோன்ற மேடை 2 மாதங்களுக்கு முன்பு அமைந்திருந்தால்...: நயினார் நாகேந்திரன் பேச்சு!

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

கார்கில் போர் நினைவிடத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


