வாழப்பாடியை அடுத்த கவர்கல்பட்டி ஹெரிடேஜ் வித்யாலயா பள்ளி மாணவர்கள், மாநில அளவிலான கராத்தே போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
நாமக்கல் அருகிலுள்ள ஸ்ரீவாணி இன்டர்நேஷனல் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்ற ஹெரிடேஜ் வித்யாலயா பள்ளி மாணவர்கள் பே. கமல்நாத், த.சு.விஜய்ஆனந்த் ஆகியோர் முதலிடமும், ச.வினிஷ் இரண்டாமிடமும், இரா.சந்தோஷ் மூன்றாமிடமும் பிடித்து சாதனை படைத்தனர்.
மாநில அளவிலான கராத்தே போட்டியில் சாதனை படைத்த மாணவர்களை, பள்ளி தாளாளர் பெருமாள், முதல்வர் அருளானந்தம், சாய் சோடக்கான் கராத்தே சங்கத் தலைவர் சிகான் சங்கரன் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







