வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

தம்மம்பட்டியில் நான்கு நாள்களாக வீணாகும் குடிநீர்

தம்மம்பட்டி பேரூராட்சி பகுதியில் நான்கு நாள்களாக சாலையில் வடிந்து குடிநீர் வீணாகி வருகிறது.

Updated On :3 செப்டம்பர் 2018, 3:59 am

தம்மம்பட்டி பேரூராட்சி பகுதியில் நான்கு நாள்களாக சாலையில் வடிந்து குடிநீர் வீணாகி வருகிறது.
 தம்மம்பட்டி பேரூராட்சிக்குள்பட்ட 18 வார்டுகளிலும் சனிக்கிழமை வரை 10 நாள்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. மேட்டூரிலிருந்து குடிநீர் வரும் குழாயில் பழுது ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
 வீட்டுக் குடிநீர் இணைப்புகளுக்கும், தெருக்குழாய்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர்.
 அதனால் உள்ளூரிலுள்ள நீர் நிலைஆதாரங்களிலிருந்து கடைவீதியிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிக்கு மட்டும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. அத்தகைய சூழ்நிலையில் தம்மம்பட்டியில் சந்தைக்கு செல்லும் சாலையில், பிரதான குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக , கடந்த வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி சாலை சேறாகிவருகிறது.
 இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை தெருக்குழாய்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டாலும், சந்தை ரோட்டில் குடிநீர் தொடர்ந்து வீணாகி வந்தது. இதுகுறித்து தம்மம்பட்டி பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சீரமைத்திட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.