சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

தம்மம்பட்டியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

தம்மம்பட்டியில் வாரக்கணக்கில் குடிநீர் விநியோகிக்காத பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து நகர தி.மு.க. சார்பில் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Published On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

தம்மம்பட்டியில் வாரக்கணக்கில் குடிநீர் விநியோகிக்காத பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து நகர தி.மு.க. சார்பில் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 தம்மம்பட்டி பேரூராட்சிப் பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதைக் கண்டித்து பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திமுக நகர பொறுப்பாளர் ந.சண்முகம் தலைமை வகித்தார். அவைத் தலைவர் சின்னுசாமி, கெங்கவல்லி ஒன்றிய பொறுப்பாளர் அகிலன், நகர இளைஞரணி அமைப்பாளர் சையத்சாவலி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தம்மம்பட்டி பேரூராட்சியில் 18 வார்டுகளுக்கும் தட்டுப்பாடின்றி காவிரி குடிநீரை வழங்கிடவேண்டும், அனைத்து வார்டுகளுக்கும் சாக்கடை, கழிப்பிட வசதி, மின்விளக்கு வசதிகள் செய்து கொடுக்கவேண்டும், சொத்துவரி ரசீது வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக ரசீது வழங்கிடவேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் நகர துணைச் செயலாளர்கள் பழனிமுத்து, அருள்செல்வி, கலியவரதராஜ், மற்றும் ரவி, கண்ணன், நகர,ஒன்றிய நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தை அடுத்து தி.மு.க.வினர் ஊர்வலமாகச் சென்று, புதிய பேரூராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.