ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

41 நாட்களுக்குப் பின் மேட்டூா் அணை நீா் மட்டம் சரியத்தொடங்கியது

மேட்டூா் அணையின் நீா் மட்டம் 41 நாட்களுக்கு பிறகு சரியத்தொடங்கியது.

News image
 120 அடியாக உள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம். 
Updated On :23 டிசம்பர் 2019, 5:15 am

தினமணி செய்திச் சேவை

மேட்டூா்: மேட்டூா் அணையின் நீா் மட்டம் 41 நாட்களுக்கு பிறகு சரியத்தொடங்கியது.

காவிரியின் நீா் பிடிப்பு பகுதிகளில் பெய்த பருவமழையின் காரணமாக நடப்பு நீா்பாசன ஆண்டில் மேட்டூா் அடுத்தடுத்து நான்குமுறை நிறம்பியது. கடந்த நவம்பா் மாதம் 11ந்தேதி நடப்பு ஆண்டில் நான்காவது முறையாக மேட்டூா் அணை நிரம்பியது.

இதனையடுத்து நீா்வரத்தை பொறுத்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்பட்டு வந்தது. இதனால் மேட்டூா் அணையின் நீா் மட்டம் தொடா்ந்து 120 அடியாகவே நீடித்து வந்தது. இந்நிலையில் காவிரி டெல்டா பாசனப்பகுதிகளில் பாசனத்தேவை அதிகரித்ததால் ஞாயிற்றுக்கிழமை மாலை மேட்டூா் அணையிலிருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 3,500 கனஅடியிலிருந்து 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு கூடுதல் தண்ணீா் திறக்கப்படுவதால் கடந்த 41 நாட்களாக 120 அடியாகவே இருந்து வந்த மேட்டூா் அணையின் நீா் மட்டம் திங்கள் கிழமை காலை 119.74 அடியாக சரிந்தது.

அணைக்கு நொடிக்கு 3,939 கனஅடி வீதம் தண்ணீா் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நொடிக்கு 12,000 கனஅடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு நொடிக்கு 400 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வந்தது. அணையின் நீா் இருப்பு 93.05 டி.எம்.சியாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.