எடப்பாடி அருகே கூரை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டிலிருந்த ரூ.10 லட்சம் மற்றும் தங்க நகைகள் எரிந்து சேதமடைந்தன.
எடப்பாடி நகராட்சிக்குள்பட்ட மோட்டூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தகவுண்டர் மகன் ஆண்டியப்பன் (44), தனியார் பள்ளியில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் மேட்டூர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் அருகில் சொந்த கூரை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை ஆண்டியப்பன் குடியிருந்த பகுதியில் காற்று பலமாக வீசியதாக கூறப்படுகிறது. அப்போது, ஆண்டியப்பன் வீட்டின் மீது சென்ற மின்கம்பிகள் மரக்கிளைகளில் உரசியதில் வீட்டின் மீது தீப்பொறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் தீப்பிடித்த வீடு, காற்று பலமாக வீசியதால் கொழுந்துவிட்டு எரிந்தனவாம். தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த எடப்பாடி தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கப் போராடியும் வீடு முழுவதும் தீயில் எரிந்து சேதமடைந்தது. இதில் சுமார் ரூ.10 லட்சம் மற்றும் தங்க நகைகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. எடப்பாடி வருவாய்த் துறை அலுவலர்கள் அப்பகுதியில் முகாமிட்டு சேத விவரங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொடரும் வினாத்தாள் கசிவு: கல்வியமைச்சரை பிரதமா் நீக்காதது ஏன்? - ராகுல் கேள்வி

ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா பரவல்: சா்வதேச சுகாதார நெருக்கடியாக அறிவிப்பு
சாஸ்திரி பூங்கா துப்பாக்கிச்சூடு சம்பவம்: இரண்டாவது நபா் கைது

ஹோா்முஸ் நீரிணையில் வா்த்தக கப்பல்கள் மீது தாக்குதலை ஏற்க முடியாது: ஐ.நா.வில் இந்தியா
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
