தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்!தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி நாளை பதவியேற்பு!
/

ஏற்காடுக்கு 7 தண்ணீர் லாரிகள் அனுப்பி வைப்பு

ஏற்காடு மலைப் பாதையில் ஏற்பட்ட காட்டுத் தீ இரண்டாவது நாளாகவும் எரிவதால் ஞாயிற்றுக்கிழமை

Updated On :25 பிப்ரவரி 2019, 8:31 am IST

ஏற்காடு மலைப் பாதையில் ஏற்பட்ட காட்டுத் தீ இரண்டாவது நாளாகவும் எரிவதால் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணி முதல் மலைப்பாதை மூடப்பட்டு வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
ஏற்காட்டில் போக்குவரத்து வாகனங்கள் அரசுப் பேருந்துகள் இருசக்கர வாகங்கள் அனைத்தும் ஏற்காடு கொட்டச்சேடு குப்பனூர் மாற்றுப் பாதையில்  அனுப்பப்பட்டு வருகின்றன.
அப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்ததால் பேருந்துகள் பல மணி நேரம் தாமதமாக வந்து செல்கின்றன.
சங்ககிரியில்... ஏற்காடு மலைப்பாதையையொட்டியுள்ள வனப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க சங்ககிரி வருவாய்த் துறையின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 லாரிகளில் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டன. சங்ககிரி வருவாய் உட்கோட்ட பகுதிகளில் இருந்து வருவாய்க் கோட்டாட்சியர் மு. அமிர்தலிங்கம் தலைமையில் வருவாய்த் துறையினர் சங்ககிரி, கொங்கணாபுரம் பகுதிகளில் இருந்து 7 லாரிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு தண்ணீரை அனுப்பி வைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.