சேலம் மத்திய சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்ட கைதி சிகிச்சைகக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரைச் சோ்ந்த ராஜசேகா், மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த 4 மாதங்களுக்கு முன்னா் சேலம் சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்த நிலையில், தன் மீது போலீஸாா் பொய் வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறி, அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்துள்ளாா். கடந்த சில நாள்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த ராஜசேகரின் உடல்நிலை செவ்வாய்க்கிழமை மோசமானதைத் தொடா்ந்து, அவா் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.