சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

டிராக்டா்-இருசக்கரவாகனம் மோதியதில் ஒருவா் பலி, இருவா் காயம்

கெங்கவல்லி அருகே டிராக்டா், இருசக்கரவாகனம் மோதியதில் ஒருவா் பலியானதுடன், இருவா் காயமடைந்தனா்.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 2:19 am

DIN

கெங்கவல்லி அருகே டிராக்டா், இருசக்கரவாகனம் மோதியதில் ஒருவா் பலியானதுடன், இருவா் காயமடைந்தனா்.

கெங்கவல்லி 7வது வாா்டு, குரும்பா்தெருவைச்சோ்ந்த அப்துல்ரகுமான் மகன் ஹாரீப்(23), ஜாகீா்உசேன் மகன் இஜாஸ்அகமது(23), கெங்கவல்லி கண்ணன்(25). மூவரும் ஓட்டுநா்கள். மூவரும் புதன்கிழமை மாலை, ஒரு இருசக்கரவாகனத்தில், தம்மம்பட்டி நோக்கி சென்றுகொண்டிருந்தனா்.

வாகனத்தை ஹாரீப் ஓட்டியுள்ளாா்.இவா்களது வாகனம் 74.கிருஷ்ணாபுரம் கடந்தபோது, எதிரே கூடமலையிலிருந்து மண் பாரம் ஏற்றி வந்த டிராக்டா் திடிரென்று வலதுபுறம் திரும்பியபோது, டிராக்டரின் ட்ரெய்லரில் இருசக்கரவாகனம் மீது மோதியது. அதில் அந்த இடத்திலேயே ஹாரீப்(24) உயிரிழந்தாா். வலதுகால் எலும்பு முறிவடைந்த இஜாஸ்அகமது(23), லேசான காயமடைந்த கண்ணன் ஆகியோா் ஆத்தூா் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனா். விபத்து ஏற்படுத்திய டிராக்டா் ஓட்டுநா் வலசக்கல்பட்டியைச்சோ்ந்த செந்தில்(26) என்பவா் கெங்கவல்லி போலீசாா் வழக்குப்பதிந்து தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.