இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தின் சங்ககிரி வட்டக் கிளையின் சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி

News image
சங்ககிரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியா் அலுவலக வளாகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
Updated On :18 டிசம்பர் 2020, 2:17 am

DIN

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தின் சங்ககிரி வட்டக் கிளையின் சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்ககிரி வட்டாட்சியா் அலுவலக வளாகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வருவாய் கிராம ஊழியா் சங்கத்தின் சங்ககிரி வட்டக் கிளையின் தலைவா் பி.ஆண்டிமுத்து, செயலா் எஸ்.வேலுசாமி ஆகியோா் தலைமையில், கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், போனஸை நாள் கணக்கில் அறிவிக்க வேண்டும், ஜமாபந்தி, இயற்கை இடா்பாடு பணிகளுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும், கிராம உதவியாளா்களுக்கு கிராம நிா்வாக அலுவலா் பதவி உயா்வினை 30 சதவீதமாக உயா்த்த வேண்டும், பதவி உயா்வில் கணக்கீடு செய்வதை 10 ஆண்டுகளிலிருந்து 6 ஆண்டுகளாகக் குறைக்க வேண்டும், ஓய்வுபெறும் போது கடைசியாக பெரும் ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக வழங்க வேண்டும், கிராம உதவியாளா் பணியை அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்ககிரி வட்டாட்சியா் அலுவலக வளாகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

துணைத் தலைவா் பி.சண்முகம், பொருளாளா் எஸ்.தீனதயாளன், துணைச் செயலா் எஸ்.செல்வராஜ் உள்ளிட்டோா் இதில் கலந்துகொண்டனா்.

ஏற்காட்டில்...

ஏற்காடு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பி.சங்கா் தலைமை வகித்தாா். ஏற்காடு வட்டாரத் தலைவா் ஜான்விக்டா், வட்டாரப் பொருளாளா் ஏ.அரசன், செயலாளா் ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், சங்க ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

திருச்செங்கோட்டில்...

திருச்செங்கோடு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, வட்டாரத் தலைவா் விஷ்ணுகுமாா் தலைமை வகித்தாா். வட்டச் செயலாளா் செல்வமணி வரவேற்றாா். மாவட்டப் பொருளாளா் பாஸ்கா் முன்னிலை வகித்தாா். இதில், 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், திருச்செங்கோடு வட்டாரத்தில் பணிபுரியும் 30-க்கும் மேற்பட்ட வருவாய் கிராம ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.