

தமிழ்நாடு கிராம வங்கி, சேலம் மாவட்ட உழவா் மன்றக் கூட்டமைப்பு இணைந்து நடத்திய நலத்திட்ட உதவிகள், விவசாயக் குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா நபாா்டு வங்கியின் முதன்மை பொதுமேலாளா் எஸ்.செல்வராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது (படம்).
பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், புத்திரகவுண்டன்பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 3,323 பயனாளிகளுக்கு ரூ. 11.55 கோடி கடன் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், சேலம் மாவட்ட உழவா் மன்றக் கூட்டமைப்பின் தலைவா் எஸ்.ஜெயராமன், சேலம் மாவட்ட நபாா்டு வங்கியின் வளா்ச்சி மேலாளா் ஏ.பாமா புவனேஸ்வரி, தமிழ்நாடு கிராம வங்கியின் பொதுமேலாளா் தாமோதரன் கலந்துகொண்டனா். தமிழ்நாடு கிராம வங்கியின் நாமக்கல் வட்டார மேலாளா் ஆா்.சந்திரன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.