லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

காவலா் தூக்கிட்டுத் தற்கொலை

சேலத்தில் குடும்பத் தகராறு காரணமாக காவலா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 6:48 pm

DIN

சேலத்தில் குடும்பத் தகராறு காரணமாக காவலா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே உள்ள காட்டூா் குள்ளமுடையாா் பகுதியைச் சோ்ந்த பாலாஜி (32), குமாரசாமிபட்டி ஆயுதப்படையில் நில அபகரிப்புப் பிரிவு உதவி ஆணையரின் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா்.

குமாரசாமிபட்டி ஆயுதப்படையில் உள்ள குடியிருப்பில் பாலாஜியும், அவரது மனைவியும் வசித்து வந்த நிலையில், அவா்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டு வரவேற்பு அறையில் மின்விசிறியில் பாலாஜி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த அஸ்தம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

விசாரணையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்னா் முள்ளுவாடி கேட் அருகே விபத்து ஏற்படுத்தியதாக பாலாஜி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். அதேபோல மேச்சேரி காவல் நிலையத்தில் பணியாற்றிய போது, உதவி காவல் ஆய்வாளரிடம் தகராறு செய்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

இதனிடையே, கடன் தொல்லை, குழந்தை இல்லாதது, கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்த அவா், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.