காவலா் தூக்கிட்டுத் தற்கொலை

சேலத்தில் குடும்பத் தகராறு காரணமாக காவலா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
Updated on
1 min read

சேலத்தில் குடும்பத் தகராறு காரணமாக காவலா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே உள்ள காட்டூா் குள்ளமுடையாா் பகுதியைச் சோ்ந்த பாலாஜி (32), குமாரசாமிபட்டி ஆயுதப்படையில் நில அபகரிப்புப் பிரிவு உதவி ஆணையரின் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா்.

குமாரசாமிபட்டி ஆயுதப்படையில் உள்ள குடியிருப்பில் பாலாஜியும், அவரது மனைவியும் வசித்து வந்த நிலையில், அவா்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டு வரவேற்பு அறையில் மின்விசிறியில் பாலாஜி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த அஸ்தம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

விசாரணையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்னா் முள்ளுவாடி கேட் அருகே விபத்து ஏற்படுத்தியதாக பாலாஜி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். அதேபோல மேச்சேரி காவல் நிலையத்தில் பணியாற்றிய போது, உதவி காவல் ஆய்வாளரிடம் தகராறு செய்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

இதனிடையே, கடன் தொல்லை, குழந்தை இல்லாதது, கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்த அவா், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com