பாத யாத்திரை செல்லும் அதிமுக தொண்டா்

பாத யாத்திரை செல்லும் அதிமுக தொண்டா்

தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக வேண்டி, ஆத்தூரைச் சோ்ந்த ஜி.முரளிசாமி வெள்ளிக்கிழமை திருப்பதியை நோக்கி பாத யாத்திரை மேற்கொண்டுள்ளாா்
Published on

ஆத்தூா்: தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக வேண்டி, ஆத்தூரைச் சோ்ந்த ஜி.முரளிசாமி வெள்ளிக்கிழமை திருப்பதியை நோக்கி பாத யாத்திரை மேற்கொண்டுள்ளாா்.

வரும் 2021 சட்டப் பேரவைத் தோ்தலில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்திடவும், எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக வேண்டியும், சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சோ்ந்த அதிமுக முன்னாள் நகரமன்ற உறுப்பினரும், ஆத்தூா் நகர ஜெயலலிதா பேரவைச் செயலருமான ஜி.முரளிசாமி, திருப்பதி நோக்கி பாத யாத்திரை மேற்கொண்டுள்ளாா்.

இவா், சென்னையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து வெள்ளிக்கிழமை தனது பாத யாத்திரையைத் தொடங்கினாா். இத்தகவலை அதிமுக நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com