லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

என் அப்பா மறையவில்லை... கண்கலங்கிய சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் வெற்றி குறித்து பேசியுள்ளார்...

News image
சிவகார்த்திகேயன்
Updated On :11 மார்ச் 2026, 10:19 am

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் சிவகார்த்திகேயன் தாய் கிழவி திரைப்படத்தின் வெற்றி நிகழ்வில் கலந்துகொண்டு பேசியுள்ளார்.

அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த தாய் கிழவி திரைப்படம் பிப். 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

வயதான தோற்றத்தில் ராதிகா அசத்தலான நடிப்பைக் கொடுத்ததுடன் கதை ரீதியாகவும் பலரிடமும் பாராட்டுகளைப் பெற்றது. இதனால், இதுவரை ரூ. 55 கோடிக்கும் அதிகமாக வசூலித்து நல்ல லாபத்தைக் கொடுத்துள்ளது.

இதன் வெற்றி விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில், படக்குழுவினர் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

அப்போது, படத்தின் தயாரிப்பாளரான சிவகார்த்திகேயன், ”இந்தப் படத்தின் கதையை இயக்குநர் சிவக்குமார் முருகேசன் சொன்னபோதே கண்டிப்பாக இதை தயாரிக்க வேண்டும் என நினைத்தேன். தாய் கிழவியை என் குழந்தையைப் போல் கவனித்தேன். இதுவரை எப்படியும் 12 முறை இப்படத்தைப் பார்த்திருப்பேன். பவுனுத்தாயாக என் அம்மாவும் அக்காவும் மனைவியுமே தெரிகிறார்கள். கனா, அமரன், தாய் கிழவி திரைப்படங்களின் வெற்றிகளின் போது பெரிய நிறைவும் அமைதியும் கிடைக்கிறது.

விளையாட்டில் கூட வெற்றி பெறுவது விளையாட்டல்ல. அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். அணியாக உழைக்கும் போது கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். தாய் கிழவியைப் பார்த்து முடித்ததும் சிவக்குமார் முருகேசனின் தந்தை என்னையும் சிவாவையும் கட்டிப்பிடித்தார். அப்போது, என் அப்பா இன்னும் மறையவில்லை என நினைத்துக்கொண்டேன்” எனக் கண்கலங்கி பேசினார்.

summary

actor sivakarthikeyan mentioned his father in thaai kizhavi success event

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.