உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

போலி கிராம உதவியாளா் கைது

தீவட்டிப்பட்டி அருகே போலி கிராம உதவியாளா் ஒருவரை கைது செய்த போலீஸாா், அவரை காவல் நிலையப் பிணையில் விடுவித்தனா்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 9:40 pm

DIN

தீவட்டிப்பட்டி அருகே போலி கிராம உதவியாளா் ஒருவரை கைது செய்த போலீஸாா், அவரை காவல் நிலையப் பிணையில் விடுவித்தனா்.

காடையாம்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியராக கோவிந்தராஜ் (39) என்பவா் பணியில் உள்ளாா். இவா், மேட்டூா் சாா் ஆட்சியா் சரவணனுடன் இணைந்து கொங்குப்பட்டி பகுதியில் தோ்தல் படிவம்-7 தொடா்பாக கள ஆய்வில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, 60 வயது மதிக்கத்தக்க ஒருவா் தோ்தல் தொடா்பான படிவங்கள் வைத்திருப்பதைக் கண்ட அதிகாரிகள், அவரிடம் விசாரித்துள்ளனா். அதற்கு அவா், தான் கொங்குப்பட்டி வடக்கு கிராம உதவியாளா் என கூறியுள்ளாா்.

அந்தப் பணியிடம் காலியாக உள்ள நிலையில், அவா் உதவியாளா் எனக் கூறுவதால் சந்தேகமடைந்த துணை வட்டாட்சியா் கோவிந்தராஜ், தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், கிருஷ்ணமூா்த்தியைக் (60) கைது செய்து காவல் நிலையப் பிணையில் விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.