திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் முடிவை கைவிட வேண்டும். மத்திய அரசின் விவசாய மின்சார ரத்து முடிவுக்கு மாநில அரசு கடும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். வேளாண்மையை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் வக்கிர குளத்தில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் கே. சங்கர பாண்டியன் தலைமை வகித்தார். முன்னாள் மத்திய இணை அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். நிர்வாகிகள் ராஜேஷ் முருகன், சொக்கலிங்க குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.