சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

வீரகனூரில் பலத்த மழை-சூறைக்காற்றில் புளிய மரம் முறிந்து விழுந்தது

வீரகனூரில் நீண்டநாள்களுக்கு பிறகு மழை பெய்ததால், கோடைவெயிலில் தவித்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News image
Updated On :30 மே 2020, 12:52 pm

DIN

வீரகனூரில் நீண்டநாள்களுக்கு பிறகு மழை பெய்ததால், கோடைவெயிலில் தவித்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே  வீரகனூரில் நீண்ட நாட்களுக்கு பிறகு சுமார் ஒருமணிநேரம், நல்ல மழை பொழிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்துவந்தது. இந்நிலையில் கடந்தவாரத்தில், பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வந்தது. 

ஆனால் சேலம் மாவட்டத்தில் சில பகுதிகளில் அக்னி நட்சத்திர வெயில் காரணமாக பயிர்கள் கருகி கால்நடைகளுக்கு கூட உணவு இல்லாத நிலை இருந்தது. இந்நிலையில் சனிக்கிழமையன்று பிற்பகல் 3 மணியளவில் வீரகனூர் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பலத்த காற்றுடன் நல்ல மழை பெய்தது. இதனால் கடந்த பல நாள்களாக கோடைவெயிலில், அனல்காற்றில் தவித்துவந்த பொதுமக்கள், கோடைமழையால் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மழையின்போது, அடித்த  சூறைக்காற்றுக்கு, வீரகனூரிலேயே , வீரகனூர்}பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில்  மிகவும்பழைமையான  புளிய மரம் ஒன்று,வேரோடு முறிந்து சாலையின் குறுக்கே  விழுந்தது. இதனால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. மரத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் சாலையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பின்னர், போக்குவரத்து சீரானது.இருப்பினும் மழை,மக்களை குளிர்வித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.