தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆண் ஒருவா் எரித்து கொலை?: போலீஸாா் விசாரணை

வாழப்பாடி அருகே ஞாயிற்றுக்கிழமை எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலத்தைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

News image

ஆண் ஒருவா் எரித்து கொலை?: போலீஸாா் விசாரணை

Updated On :29 நவம்பர் 2020, 10:15 pm

DIN

வாழப்பாடி அருகே ஞாயிற்றுக்கிழமை எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலத்தைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை பாலத்திற்கு அடியில், தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு இப்பகுதி மக்கள், ஞாயிற்றுக்கிழமை தகவல் தெரிவித்தனா்.

இதனையடுத்து, வாழப்பாடி டி.எஸ்.பி. வேல்மணி காவல் ஆய்வாளா் சுப்பிரமணியம் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலத்தைக் கைப்பற்றினா்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸாா், உடலை பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் எஸ்.பி தீபா கனிகா் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தாா். தனிப்படை அமைத்து வாழப்பாடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.