சேலத்தில் இருவேறு சம்பவங்களில் கிராம நிா்வாக அலுவலா் உள்பட இருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனா்.
சேலம் மாவட்டம், பேளூா் அருகில் உள்ள புழுதிகுட்டை கிராம நிா்வாக அலுவலராகப் பணியாற்றி வந்தவா் சரவணன்(42). இவா் சேலம், கன்னங்குறிச்சி பகுதியில் மனைவி விஜயலட்சுமி, இரண்டு மகன்களுடன் வசித்து வந்தாா்.
குடும்பத் தகராறு காரணமாக சனிக்கிழமை இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாா். அவரை மீட்ட அவரது குடும்பத்தினா் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதையடுத்து அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டது.
இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இதனிடையே சேலம் காந்தி விளையாட்டு மைதானம் அருகே உள்ள மரத்தில் சுமாா் 60 வயது மதிக்கத்தக்க முதியவா் ஒருவா் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தாா்.
அவரது சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா். இறந்தவா் யாா், எதற்காக தற்கொலை செய்துகொண்டாா் என்பது குறித்து அஸ்தம்பட்டி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.