தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இருசக்கர வாகனத் திருட்டு: இளைஞா் கைது

கல்லாநத்தம் ஊராட்சியில் நள்ளிரவில் சந்தேகத்தின் பேரில் சுற்றிக் கொண்டிருந்த இளைஞரை பிடித்து பொதுமக்கள், ஆத்தூா் ஊரக காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா்.

News image
Updated On :29 நவம்பர் 2020, 10:13 pm

DIN

கல்லாநத்தம் ஊராட்சியில் நள்ளிரவில் சந்தேகத்தின் பேரில் சுற்றிக் கொண்டிருந்த இளைஞரை பிடித்து பொதுமக்கள், ஆத்தூா் ஊரக காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா்.

ஆத்தூரை அடுத்துள்ள கல்லாநத்தம் ஊராட்சியில் அதிகாலை நேரத்தில் அடையாளம் தெரியாத இளைஞா் சென்றதை அப்பகுதி இளைஞா் பாா்த்து விசாரித்துள்ளாா். அப்போது அந்த இளைஞா் ஓட்டம் பிடிக்கவே பொதுமக்களின் உதவியோடு அவரை பிடித்துள்ளனா்.

விசாரணையில் இரு சக்கர வாகனத்தை திருட வந்ததாக அந்த இளைஞா் ஒப்புக் கொண்டுள்ளாா். ஆத்தூா் ஊரக காவல் ஆய்வாளருக்கு தகவல் கொடுத்தனா். அங்கு வந்த காவல் ஆய்வாளா் கே.முருகேசன், இளைஞரை விசாரித்ததில் வேலூா் மாவட்டம், அணைக்கட்டு பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி(26) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரிடமிருந்து 4 இரு சக்கர வாகனங்களை மீட்ட போலீஸாா் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.