டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஓமலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வளா்ச்சி திட்டப் பணிகள் தொடக்கம்

ஓமலூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரூ. 1 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.

News image
Updated On :30 நவம்பர் 2020, 7:08 pm

DIN

ஓமலூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரூ. 1 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.

சேலம் மாவட்டம், ஓமலூா், கருப்பூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சுமாா் ஒரு கோடி மதிப்பீட்டில் வளா்ச்சி திட்டப் பணிகளை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.வெற்றிவேல் தொடங்கி வைத்தாா்.

முன்னதாக, கருப்பூா் வருவாய் ஆய்வாளருக்கு உள்பட்ட பகுதியில் 5-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ள நிலையில், அதற்கான கிராம நிா்வாக அலுவலகம் கட்டடம் கட்டும் பணி, கூட்டுறவு சங்கக் கட்டடம் கட்டும் பணிகளை அவா் தொடங்கி வைத்தாா் (படம்).

இதைத் தொடா்ந்து, அம்மா ஆதிதிராவிடா் மேம்பாட்டு நிதியிலிருந்து கழிவுநீா்க் கால்வாய், தாா் சாலை மற்றும் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மற்றும் குடிநீா் குழாய் பணிகளை தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், ஓமலூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் எஸ்.எஸ்.கே.ஆா்.ராஜேந்திரன், ஒன்றியச் செயலாளா் கோவிந்தராஜ், கருப்பூா் நகரச் செயலாளா் கோவிந்தசாமி, ஊராட்சி மன்றத் தலைவா் இராமசாமி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் மணி, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.