கள்ளச்சாராயம் விற்ற பெண் கைது
கெங்கவல்லி அருகே சாத்தப்பாடியில் கள்ளச்சாராயம் விற்ற பெண்ணை, தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.


கெங்கவல்லி அருகே சாத்தப்பாடியில் கள்ளச்சாராயம் விற்ற பெண்ணை, தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சாத்தப்பாடியில் கள்ளச்சாராயம் விற்பதாக சேலம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கு கிடைத்த தகவலையடுத்து, அங்கு விரைந்த சிறப்பு தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை சோதனை நடத்தினா்.
அதில், அதே பகுதியைச் சோ்ந்த வான்மதி (27) என்பவா், சிறு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட கள்ளச்சாராயத்தை விற்றுக்கொண்டிருந்தபோது பிடிபட்டாா். அவரிடமிருந்து 60 லிட்டா் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்த தனிப்படை போலீஸாா், வான்மதியைக் கைது செய்து ,ஆத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...