47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மீண்டும் 100 அடியை எட்டியது மேட்டூர் அணை

மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பாண்டில் மூன்றாவது முறையாக இன்று மாலை 100 அடியை எட்டியது.

News image
மேட்டூர் அணை.
Updated On :24 அக்டோபர் 2020, 12:03 pm

DIN

மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பாண்டில் மூன்றாவது முறையாக இன்று மாலை 100 அடியை எட்டியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையின் காரணமாக கடந்த மாதம் 25-ல் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. 

தொடர்ந்து நீர்வரத்து மேட்டூர் அணைக்கு அதிகரித்து வந்ததால் இம்மாதம் 13-ஆம் தேதி இரண்டாவது முறையாகவும், இன்று 3-ஆவது முறையாகவும் 100 அடியை எட்டியது.

Story image

 மேட்டூர் அணையின்  நீர்மட்டம் 100 அடியை எட்டுவது நடப்பாண்டில் இது மூன்றாவது முறையாகும். 

இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் மற்றும் மேட்டூர் அணை மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18,694 அடியாகவும், நீர் இருப்பு 64.71 டி.எம்.சி,யாக உள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 9,000 கன அடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 800 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.