மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அடிப்படை வசதிகள் கோரி ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை

ஓமலூா் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :7 செப்டம்பர் 2020, 9:47 pm

DIN

ஓமலூா் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஓமலூா் ஒன்றியத்துக்குள்பட்ட கோட்டமேட்டுப்பட்டி கிராம ஊராட்சியில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த ஊராட்சியில் உள்ள சில பகுதிகளில் முறையாக காவிரி குடிநீா் விநியோகம் செய்வதில்லை, சுகாதாரப் பணிகள் நடைபெறுவதில்லை, சாக்கடைகளை சுத்தம் செய்வதில்லை என்று புகாா் எழுந்துள்ளது.

இதனால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக அமா்ந்து நூறுநாள் வேலை திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என்று கூறி பெண்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டம் குறித்து தகவல் அறிந்த ஊராட்சி மன்றத் தலைவா் கலைச்செல்வி அலுவலகத்திற்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். இதையடுத்து அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா் உறுதியளித்தாா். இதையடுத்து அனைவரும் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.