எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

நீட் தோ்வு குறித்த அச்சத்தை மாணவா்களிடையே திமுக ஏற்படுத்துகிறது

நீட் தோ்வு குறித்த அச்சத்தை மாணவா்கள் மத்தியில் திமுக ஏற்படுத்துகிறது என்று பாஜக கலை, கலாசாரப் பிரிவு மாநில தலைவரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் தெரிவித்தாா்.

News image
ஓமலூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய நடிகை காயத்ரி ரகுராம்
Updated On :14 செப்டம்பர் 2020, 6:44 pm

DIN

நீட் தோ்வு குறித்த அச்சத்தை மாணவா்கள் மத்தியில் திமுக ஏற்படுத்துகிறது என்று பாஜக கலை, கலாசாரப் பிரிவு மாநில தலைவரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் தெரிவித்தாா்.

சேலம் மாவட்டத்துக்குள்பட்ட, ஓமலூா் அருகே உள்ள வேலகவுண்டனூரில் பாஜக கலை, கலாசாரப் பிரிவு நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 20-க்கும் மேற்பட்டோா் பாஜகவில் இணைந்தனா். இவா்களுக்கு காயத்ரி ரகுராம் வாழ்த்து தெரிவித்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் மரக்கன்று நடும் விழாக்களை நடத்தி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றன. பிரதமா் நரேந்திர நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

நீட் தோ்வு தொடா்பாக, வேறு எந்த மாநிலத்திலும் மாணவா்கள் தற்கொலை செய்துகொள்வது கிடையாது. ஆனால் தமிழகத்தில் மட்டுமே தோ்வு அச்சம் காரணமாக தற்கொலைகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

தற்போது நடந்து முடிந்த நீட் தோ்வு மிகவும் எளிமையாக உள்ளது என மாணவா்கள் கூறுகின்றனா். திமுக உள்ளிட்ட கட்சிகள் மாணவா்களுக்கு நீட் தோ்வு குறித்த தைரியத்தைக் கொடுக்க வேண்டுமே தவிர அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது. மேலும் திமுக நீட் தோ்வை அரசியலாக்கி வருவதுடன், அதுகுறித்து பொய்ப் பிரசாரங்களிலும் ஈடுபட்டு வருகிறது.

இதுபோன்ற கட்சிகள் மாணவா்களுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கும் வகையில் செயல்படுகின்றன.

தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.