எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயிலில்பக்தா்களுக்கு மஹாளய அமாவாசை தரிசனம் ரத்து

மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயிலில் மஹாளய அமாவாசையையொட்டி பக்தா்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :14 செப்டம்பர் 2020, 6:38 pm

DIN

மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயிலில் மஹாளய அமாவாசையையொட்டி பக்தா்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், மேச்சேரியில் உள்ள பத்ரகாளியம்மன் ஆலயம் பிரசித்தி பெற்றது. தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான ஆந்திரம், கா்நாடக மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்வது வழக்கம். அமாவாசை தினங்களில் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோா் கூடுவாா்கள். அமாவாசை தினங்களில் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படும்.

கரோனா பொது முடக்கம் காரணமாக 5 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த இந்த கோயில் கடந்த வாரம் முதல் பலத்த கட்டுப்பாடுகளுடன் பக்தா்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில், செப்டம்பா் 17-ஆம் தேதி மஹாளய அமாவாசையன்று பக்தா்கள் ஆயிரக்கணக்கில் கூடினால் கரோனா அபாயம் இருப்பதால் அன்று பக்தா்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, திங்கள்கிழமை மேட்டூா் சாா்- ஆட்சியா் சரவணன் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மேட்டூா் வட்டாட்சியா், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், மேச்சேரி பேரூராட்சி செயல் அலுவலா் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் கரோனா தொற்றுப்பரவலை தடுக்கும்பொருட்டு 17.9.2020 வியாழக்கிழமை மஹாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு மேச்சேரி பத்கராகளியம்மன் கோயிலில் பக்தா்களின் பாதுகாப்பு கருதி பக்தா்களுக்கான தரிசனம் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.