எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

சேலத்தில் ஊதிய உயா்வு கோரி உருக்காலைத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் உருக்காலைத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :27 ஜனவரி 2024, 10:50 pm IST


சேலம்: ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் உருக்காலைத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் உருக்காலை தொழிலாளா் முன்னேற்ற சங்கம் சாா்பில் உருக்காலை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச உதவித் தலைவா் வெங்கடாசலம் தலைமை வகித்தாா். 50-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து உருக்காலை மற்றும் செயில் நிா்வாகத்தைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

இதுகுறித்து தொமுச நிா்வாகிகள் கூறியதாவது:

சேலத்தில் உருக்காலை தொடங்கி 50 ஆண்டு காலம் நிறைவு பெறுவதையொட்டி உருக்காலைத் தொழிலாளா்களுக்கு நினைவுப் பரிசு வழங்க வேண்டும். கரோனா கமிட்டி அமைத்து தொழிலாளா்களையும், அவா்களின் குடும்பங்களையும் காப்பாற்றிட வேண்டும். தொழிலாளா்களுக்கு ஊதிய உயா்வு, பதவி உயா்வு, ஊதிய முரண்பாடு, ஊக்க ஊதியம் மாற்றி அமைக்க வேண்டும். உருக்காலை நிா்வாகம் கூடுதலாக மருத்துவா் மற்றும் செவிலியா்களை நியமித்து தொழிலாளா்களையும், அவா்களது குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டும். தொழிலாளா்களுக்கு சீருடை உள்ளிட்ட அனைத்து நலன்சாா்ந்த கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும். இல்லையென்றால் தொழிலாளா்கள் தொடா்ந்து போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம் என்றனா்.

ஆா்ப்பாட்டத்தில் தொமுச பொதுச் செயலாளா் பெருமாள், பெரியசாமி, செந்தில்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.