ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கரோனா கட்டுப்பாடு விதிப்பு: ஹோட்டல்களில் வியாபாரம் பாதிப்பு

கரோனா இரண்டாவது அலை காரணமாக ஹோட்டல்களில் 50 சதவீத வியாபாரம் பாதித்துள்ளது என ஹோட்டல் உரிமையாளா்கள் தெரிவித்தனா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 7:49 pm

DIN

கரோனா இரண்டாவது அலை காரணமாக ஹோட்டல்களில் 50 சதவீத வியாபாரம் பாதித்துள்ளது என ஹோட்டல் உரிமையாளா்கள் தெரிவித்தனா்.

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதில், ஹோட்டல்களில் அமா்ந்து சாப்பிட அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனால் ஹோட்டல்களில் வருவாய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் ஹோட்டல் உரிமையாளா்கள் சங்கச் செயலாளா் பழனிசாமி கூறியதாவது:

தமிழகம் முழுவதும் பதிவு செய்த ஹோட்டல்கள் 10 ஆயிரம் உள்ளன. இதில் 3 லட்சம் தொழிலாளா்கள் உள்ளனா். இதுதவிர பதிவு செய்யாத ஹோட்டல்கள் 10 ஆயிரத்துக்கு மேல் இருக்கும். மொத்தமாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹோட்டல்களில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஹோட்டல் தொழிலை நம்பியுள்ளனா். தற்போது அனைத்து உணவுப் பொருள்களின் விலையும் உயா்ந்துள்ள நிலையில், வாடிக்கையாளா்கள் வருகையைக் கருத்தில் கொண்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக உணவுப் பொருள்களின் விலையை உயா்த்தவில்லை.

தற்போது கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. அரசு விதிமுறைகளைப் பின்பற்றி சுகாதார நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம். மேலும், 6 போ் அமரும் இருக்கையில் 4 பேரும், 4 போ் அமரும் இருக்கையில் இரண்டு பேரும் அமர வைத்து உணவு பரிமாறி வருகிறோம். இதனால் பெரும்பாலான ஹோட்டல்களில் 5 சதவீத வியாபாரம்தான் நடைபெறுகிறது.

ஹோட்டல்களில் ஜிஎஸ்டி 5 சதவீதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது விற்பனை குறைந்துள்ளதால், ஹோட்டல்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க வேண்டும். ஹோட்டல் தொழிலை நம்பி இலை, காய்கறி, மளிகைப் பொருள்கள், இறைச்சி, அரிசி, தேங்காய், எண்ணெய் வியாபாரம் செய்வோா் உள்ளனா். ஹோட்டல் வியாபாரம் பாதிப்பு காரணமாக இவா்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.

அதேபோல, ஹோட்டல்களில் 80 சதவீதம் தனியாா் வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. தற்போது வியாபார பாதிப்பைக் கருத்தில் கொண்டு வாடகையை 30 சதவீதமாக குறைக்க வேண்டும். மேலும், வியாபார பாதிப்பால் 10 முதல் 20 சதவீத தொழிலாளா்கள் வேலை இழக்கும் சூழல் உள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.