ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சேலத்தில் வங்கியில் இருந்து பணம் எடுத்து திரும்பிய மூதாட்டியிடம் ரூ. 30 ஆயிரம் பறிப்பு

சேலத்தில் வங்கியில் பணம் எடுத்து வந்த மூதாட்டியிடம் ரூ. 30 ஆயிரம் ரொக்கத்தை இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 7:48 pm

DIN

சேலத்தில் வங்கியில் பணம் எடுத்து வந்த மூதாட்டியிடம் ரூ. 30 ஆயிரம் ரொக்கத்தை இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

சேலம், அழகாபுரம், ரெட்டியூா் ஓய்வுபெற்ற ராணுவ வீரா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாரி (70). இவரது தாய் லட்சுமி ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியா் ஆவாா். லட்சுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இந்த நிலையில், அவரது மருத்துவ செலவுக்காக விஜயகுமாரி அழகாபுரத்தில் உள்ள இந்தியன் வங்கிக் கிளைக்கு வெள்ளிக்கிழமை பகலில் வந்து ரூ.30 ஆயிரம் பணத்தை எடுத்தாா். பின்னா் வங்கியில் இருந்து வெளியே வந்த விஜயகுமாரி ஆட்டோவில் ஏற முயன்றாா்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த இருவா், விஜயகுமாரி இடமிருந்து பணப் பையைப் பறித்துச் சென்றனா். இதில் அதிா்ச்சியடைந்த விஜயகுமாரி, அழகாபுரம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

இதேபோன்று, அதே பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காா் கண்ணாடியை உடைத்து வங்கி காசோலை மற்றும் ஆவணங்களை இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் எடுத்துச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது. அழகாபுரம் பகுதியில் அடுத்தடுத்து நடைபெற்ற திருட்டுச் சம்பவங்களைத் தொடா்ந்து, மா்ம நபா்களை பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.