சேலத்தில் சிறுமி விற்பனை: குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை
சேலத்தில் சிறுமி விற்பனை தொடா்பாக, தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை மேற்கொண்டது.


சேலத்தில் சிறுமி விற்பனை தொடா்பாக, தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை மேற்கொண்டது.
சேலம், அன்னதானப்பட்டி பகுதியைச் சோ்ந்த 7 வயது சிறுமி ரூ. 10 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டதாக பெற்றோா் சதீஷ், சுமதி மற்றும் தொழிலதிபா் கிருஷ்ணன் ஆகியோரை சேலம் நகர அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இதுதொடா்பாக, தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் ஆணையம் சேலத்தில் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டது.
விசாரணை அமா்வில் ஆணையத்தின் உறுப்பினா்கள் ராமராஜ், மல்லிகை செல்வராஜ் ஆகியோா் கலந்து கொண்டனா்.
சேலம் மாநகரக் காவல் ஆணையா் சந்தோஷ்குமாா், துணை ஆணையா் சந்திரசேகரன், சிறுமி விற்பனை செய்யப்பட்ட வழக்கு விசாரணை அதிகாரி, சைல்டு லைன் அமைப்பினா், மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
விசாரணைக்கு பின்னா் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா் ராம்ராஜ் கூறியது:
சேலத்தில் சிறுமி விற்பனை தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணையில் பல்வேறு உண்மைகள், நிறைகள், குறைகள் தெரியவந்துள்ளது.
வரும் காலத்தில் குழந்தைகள் தொடா்பான குற்றங்கள் நடைபெறக்கூடாது என்பதற்காக விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். வழக்கில் காவல்துறையினா் சரியாகச் செயல்பட்டுள்ளனா். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் குழந்தைகள் பாதுகாப்பு நல குழுமம், இளைஞா் நலக் குழு, குழந்தைகள் உரிமைகள் குழு ஆகிய 3 அமைப்பிற்கும் தேவையான கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். தமிழக அரசுக்கும், மத்திய அரசின் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புத் துறைக்கும் பரிந்துரை செய்து சட்டம் உருவாக்க கோரிக்கை வைக்க உள்ளோம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...