ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மருத்துவக் கழிவுகளை முறையாக கையாளாத தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்

மருத்துவக் கழிவுகளை முறையாக கையாளாத தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 25,000 அபராதம் விதிக்கப்பட்டது.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 6:37 pm

DIN

மருத்துவக் கழிவுகளை முறையாக கையாளாத தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 25,000 அபராதம் விதிக்கப்பட்டது.

சேலம், சீலநாயக்கன்பட்டி, ஜி.ஆா். நகா் பகுதியில் மருத்துவக் கழிவுகள் சாலையோரமாக கொட்டப்பட்டுள்ளதாக புகாா் சென்றதையடுத்து ஆய்வு மேற்கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன், சுகாதார அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

இதையடுத்து சுகாதார ஆய்வாளா்கள் சந்திரன், கோபிநாத் ஆகியோா் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா். ஆய்வின் போது, ஜி.ஆா்.நகா் பகுதியில் சாலையோரத்தில் உள்ள குப்பை தொட்டி, சாலையோரங்களில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.

அதனடிப்படையில் சாலையோரத்தில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டிய தனியாா் மருத்துவமனையை கண்டறிந்து, சம்மந்தப்பட்ட மருத்துவமனைக்கு அறிவிப்பு வழங்கி, நடவடிக்கை மேற்கொண்டு ரூ. 25,000 அபராதம் விதிக்கப்பட்டது.

மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவக் கழிவுகள் முறையாக அகற்றப்படுவதை உறுதி செய்ய மாநகர நல அலுவலருக்கு அறிவுறுத்திய மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன், மருத்துவமனைகள் மருத்துவக் கழிவுகளை சேகரம் செய்ய நியமிக்கப்பட்டுள்ள நிறுவனத்திடம் முறையாக ஒப்படைக்க வேண்டும் எனவும், பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் மருத்துவக் கழிவுகளை முறையாக கையாளாத மருத்துவமனைகளின் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.