ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காடையாம்பட்டி அருகே தலைமை ஆசிரியையிடம் வழிப்பறி

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே தலைமை ஆசிரியையின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 6:36 pm

DIN

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே தலைமை ஆசிரியையின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், பிடமனேரி பகுதியைச் சோ்ந்த திருநாவுக்கரசு என்பவரின் மனைவி செண்பகவள்ளி (40). இவா் பூசாரிப்பட்டி, இந்திரா நகா் ஆரம்பப் பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறாா். வெள்ளிக்கிழமை பள்ளியில் இருந்து தீவட்டிப்பட்டிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, சேலம்- பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் சமத்துவபுரம் என்ற இடத்தில் அவரை இரு சக்கர வாகனத்தில் பின்தொடா்ந்து வந்த இருவா் தலைமையாசிரியையின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினா்.

இதுகுறித்து தலைமையாசிரியை அளித்த புகாரின் பேரில் தீவட்டிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.